வங்க கடலில் இன்று உருவாகிறது ‘யாஸ்' புயல் ஒடிசா-வங்காளதேசம் இடையே கரையை கடக்கும்
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் - தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சிக்கு ஏற்பாடு
12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும்: பிரதமருக்குப் பெற்றோர் சங்கம் கோரிக்கை
கரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி இயக்குநர் தகவல்
பள்ளிக் கல்வி இயக்குநர் பணி நிலையில் மாற்றம்; மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்
1,621 ஆசிரியர்கள் உயிரை பறித்த தேர்தல்
இயக்குனர் பதவியில் இருந்து விலகினார் கண்ணப்பன்: பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் அதிக அதிகாரங்களுடன் பொறுப்பேற்றார்
பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியில் இருந்து கண்ணப்பன் விலகினார். பள்ளிக்கல்வித் துறையின் அதிக அதிகாரங்களுடன் கமிஷனர் நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் தொடக்க நிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கல்வித் தேவைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களை கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் ஒப்புதல் பெற்று பூர்த்தி செய்து வந்தார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் பார்வைக்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் வழியாக கொண்டு போய் சேர்த்து கொண்டிருந்த நிலையில், கல்வித்துறையில் வேலைகளை துரிதப்படுத்துவதற்காக பள்ளிக்கல்வி கமிஷனர் பதவி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.
அப்போதே இந்த பதவிகளுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அந்தவகையில் அந்த பதவியில் சிஜி தாமஸ் வைத்யன், வெங்கடேஷ் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர். இருப்பினும், பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்த கண்ணப்பன் தன்னுடைய பணியை செய்து கொண்டு தான் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர்களின் முழு அதிகாரத்தையும், பள்ளிக்கல்வி கமிஷனராக இருப்பவர் கவனிப்பார் என்ற புதிய அறிவிப்பு அரசின் மூலமாக முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பலதரப்பட்ட ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்களிடையே மீண்டும் எதிர்ப்பை ஏற்படுத்தி குரல்கள் எழும்பி இருக்கிறது.
இதற்கிடையில், பள்ளிக்கல்வி கமிஷனராக நந்தகுமார் பொறுப்பேற்று கொண்டார். அவர் பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் மற்றும் கல்வித்துறையின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன், அந்த பதவியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ் குமாரிடம், கண்ணப்பன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார், கண்ணப்பனிடம் காத்திருக்கும்படியும், வேறு ஏதாவது பதவி வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அரசு தரப்பில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது தொடர்பான எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.
தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு
52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம் தாமாகவே இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்
NHIS- DISTRICT WISE OFFICE ADDRESS & MOBILE NUMBER
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக மாற்றம்!!!
பனிரெண்டாம் பொதுத் தேர்வை ஜுலையில் நடத்த அரசு திட்டம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள்.. பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்..!
வேலம்மாள் - சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது, “நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது (வயது வந்த) அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த 216 கோடி தடுப்பூசிகளில் எந்தெந்த தடுப்பூசிகள் எவ்வளவு கிடைக்கும், அவற்றை தயாரித்து வழங்குவது யார், அது தற்போது எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வைதான் இது-
கோவிஷீல்டு - 75 கோடி, கோவேக்சின்- 55 கோடி, பயாலஜிக்கல் இ- 30 கோடி, ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி, நோவாவேக்ஸ் - 20 கோடி, பி.பி.மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி- 10 கோடி, ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. - 6 கோடி, ஸ்புட்னிக்-வி 15.6 கோடி.
ஆக மொத்தம் 216.6 கோடி தடுப்பூசி ஆகும்.
இந்த 8 வகை தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டு நாடெங்கும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
* கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆய்வுகளின்படி இந்தத்தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டில் உள்ளது.
* கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்கி வருகிறது. இதன் செயல்திறன் 81 சதவீதம். இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது. தென்ஆப்பிரிக்க வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.
* ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இது கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள 3-வது தடுப்பூசி ஆகும். ஆரம்பத்தில் இறக்குமதி செய்தாலும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது. 91.6 சதவீதம் செயல்திறனை இது கொண்டிருக்கிறது. 21 நாள் இடைவெளியில் இதன் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் வந்துள்ளது.
* நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என்றிருக்கும். இது 96.4 சதவீத செயல்திறனைக் காட்டி இருக்கிறது.
* பி.பி. மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்குகிறது. இது தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தார் சொல்கின்றனர்.
* பயாலஜிக்கல் இ தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு வரும். இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கப்போகிறது.
* ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசியை ஆமதாபாத்தின் ஜைடஸ் கேடிலா நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இதன் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இது ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவலகள் வெளியாகி உள்ளன. இது கோவேக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.
* ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இது மனிதர்களுக்கு செலுத்தி இனிதான் பரிசோதிக்கப்படவேண்டும். 2 மாதங்களில் இது தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கண்ட 8 தடுப்பூசிகளுடன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன. ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு நேற்று வந்து உள்ளது. அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே திட்டமிட்டுள்ளபடி இந்த தடுப்பூசிகள் 216 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு தயாராகி விட்டால் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மந்தை எதிர்ப்புச்சக்தியைப்பெறும் நிலை உருவாகும். அது கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
அரபிக்கடலில் உருவாகிறது தக்தே புயல்தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (சனிக்கிழமை) காலை புயலாக உருவாகிறது. இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18- ந் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.
அதேபோல் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினமும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கானஈட்டிய விடுப்பு ஊதியம் மீண்டும் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைப்புதமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்வித பிடித்தமுமின்றி வழங்கப்படும்.
இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சம்பள கணக்கு அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பித்து பெறுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, கடந்த மார்ச் மாதம் வரை ஒரு ஆண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவெடுத்து, இதற்கான உத்தரவை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வெகுவேகமாக பரவி வருகிறது. 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அடுத்த ஆண்டு 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை மேலும் ஒரு ஆண்டுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, அரசின் அனைத்து அமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் 15 பேர் மாற்றம்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில்
ரஷிய தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.995டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவிப்பு
கோவிஷீல்டு தடுப்பூசியின்2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு
பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
‘மக்கள் மருத்துவர்' என்று பெயர் எடுத்த பெண் டாக்டரின் உயிரை பறித்த கொரோனா கிராம மக்கள் உருக்கம்
மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா (வயது 32). 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம் போல நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். மருத்துவ சேவையில் ஈடுபட்ட சண்முகப்பிரியாவின் இறப்பு, மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சண்முகப்பிரியாவின் இறப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுபோல தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்திக் குறிப்பில், டாக்டர் சண்முகபிரியாவின் மறைவு மருத்துவர்களிடைய பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது மருத்துவர்கள் தயவுகூர்ந்து கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இறந்துபோன சண்முகப்பிரியாவின் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், அவர் பிறந்து, வளர்ந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமம் ஆகும். அவருடைய தாயார் பிரேமா, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
மருத்துவமனையில் தனது தாய் மக்களுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து, சிறுவயது முதலே தானும் டாக்டராக வேண்டும் என லட்சியத்துடன் சண்முகப்பிரியா கல்வி பயின்றார். அதன்படி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் படித்து டாக்டரானார்.
அதன்பிறகு அவர், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி, சின்னமனூர் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றினார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை சண்முகப்பிரியா பெற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு அவர், சின்னமனூரில் இருந்து மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டராக நியமிக்கப்பட்டார். அங்கும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வந்தார்.
குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டங்களில் மக்களுக்கு பாகுபாடின்றி அவர் சிகிச்சை அளித்தார். இந்தநிலையில் தான், கொரோனா சண்முகப்பிரியாவின் உயிரை பறித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் பிறந்த ஊரான ஓடைப்பட்டி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தோழிகள் கூறுகையில், சிறுவயது முதலே டாக்டராக வேண்டும், பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே சண்முகப்பிரியாவின் லட்சியமாக இருந்தது. அதேபோல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஏழை-எளிய மக்களின் சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்றார். அவரது இறப்பை எங்களால் ஏற்க முடியவில்லை என்றனர்.
1,212 நர்சுகள் பணி நிரந்தரம்
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் குரூப்-1 முதன்மைத்தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? தேர்வாணையம் பதில் அளிக்க தேர்வர்கள் கோரிக்கை
மறு அறிவிப்பு வெளியிடும் வரை பள்ளி ஆசிரியர்கள் 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
👍 டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர் விடைத்தாள் நகல் பெறலாம் இணையதளம் மூலம் பெற புதிய வசதி.
👉 AU EXAM 2021 | புத்தகத்தை பார்த்து எழுதலாம்ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள்அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வை நடத்தியது. இந்த தேர்வை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.
அதற்காக அண்ணா பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக மென்பொருளை உருவாக்கி இருந்தது. அந்த மென்பொருளை பயன்படுத்திதான் 3 செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்தது.
அந்தவகையில் சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 30 முதல் 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியானது. இது தேர்வை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
பிரத்யேக மென்பொருள் மூலம், பல்வேறு ஆப்ஷன்களுடன் கூடிய கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு தேர்வை நடத்திய போது மாணவர்கள், வாட்ஸ் அப் மூலம் பதிலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டதால் அது முறைகேடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும், இதன் காரணமாக அம்மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த மாதத்தில் (மே) நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதன்படி நேரடி விடைகளைக் கொண்ட கேள்வியாக இல்லாமல், பாடங்களைப் புரிந்து பதில் அளிக்கும் வகையில் விளக்க வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்றும், இதற்காக மாணவர்கள் தேர்வின் போதே புத்தகத்திலும், இணையத்திலும் எடுத்துக்காட்டுகளை தேடி, அதன்படி விடையளிக்க வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய விளக்க வகை தேர்வானது, இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றும், அதே வேளையில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வழக்கம் போல், பல்வேறு ஆப்ஷன்களைக் கொண்ட நேரடி கேள்விகளே கேட்கப்படும் என்றும், அவர்களுக்கு இந்த புதிய மாற்றம் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
😖 ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தன் கோர முகத்தைக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது இதுவரை காணப்படாத புதிய உச்சம் என்பது பதிவு செய்யத்தக்கதாகும்.
நாட்டில் இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.
நேற்று முன்தினம் 1,341 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,501 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கையானது 1 லட்சத்து 77 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பலியான 1,501 பேரில் 419 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 167 பேரும், சத்தீஷ்காரில் 158 பேரும், உத்தரபிரதேசத்தில் 120 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.
இருப்பினும் நேற்று அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பின.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.20 சதவீதம் ஆகும்.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்து 423 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இதுவரை இப்படி நாட்டில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 643 பேர் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் 56 ஆயிரத்து 783 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 15 ஆயிரத்து 414 பேரும், சத்தீஷ்காரில் 9,828 பேரும் கொரோனா தொற்று பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 86.62 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்தியாவில் நேற்று தொடர்ந்து 39-வது நாளாக சிகிச்சையில் சேருவோர் எண்ணிக்கை ஏறுமுகம் கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டுமே புதிதாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 576 பேர் புதிதாக கொரோனா மீட்புக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 12.18 சதவீதம் ஆகும்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிற மராட்டியத்தில் மட்டுமே 6 லட்சத்து 49 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 59 பேரும், சத்தீஷ்காரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 பேரும், கர்நாடகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 179 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 394 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
😱 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு..ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு...தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், ஷோரூம்கள் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வழிபாட்டு தலங்களை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரைக்கும், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரைக்கும் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது.
ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக்கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ந் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
*கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
*வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் அனுமதிக்கப்படமாட்டாது.
*இரவு நேர ஊரடங்கின் போது அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள்போன்ற மருத்துவத்துறை சேர்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போதுஅனுமதிக்கப்படும்.
* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
*பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
*தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
*மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
*அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
*அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
*சோமட்டோ, சுவிக்கி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகிறது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
*ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.
*ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
*கும்பாபிஷேகம், திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது கும்பாபிஷேகம் நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ கோவில் பணியாளர்கள், கோவில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
புதிதாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
*பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத்தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
*கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
*தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கலாம். இதுபோன்ற விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.
*திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முககவசம் அணிவது, சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை தவறாமல் பின்பற்றப்படுவதை திருமண மண்டப நிர்வாகம், தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திருமண மண்டப மற்றும் தியேட்டர் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
*புதிய கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
*மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைத்துக்கொள்ளவும், ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச் சரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய்பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் முககவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுவதையும், வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙋 என்ஜினீயரிங் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைப்பு மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற இருந்த என்ஜினீயரிங் (ஜே.இ.இ.) பிரதான நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் வகையிலும் இந்த ஆண்டு முதல் ஜே.இ.இ பிரதான நுழைவுத்தேர்வு 4 முறை நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்களின் சிறந்த மதிப்பெண்ணை கருத்தில் எடுக்கப்படும்.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறையே 6.2 லட்சம் மற்றும் 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத நுழைவுத்தேர்வுகள் வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்களும் சிறப்பாக தயாராகி வந்தனர்.
ஆனால் நாடு முழுவதும் தற்போது கொரோனா அலை சுழன்றடிக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2.61 லட்சத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளும், 1500-க்கு மேற்பட்ட மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்திருக்கின்றன.
இந்த சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.
அதன்படி மேற்படி தேர்வுகளை தள்ளிவைப்பதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக என்.டி.ஏ. வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் தேர்வு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அதாவது தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளது.
முன்னதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் தளத்தில், ‘தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்குமாறு என்.டி.ஏ. இயக்குனருக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். நமது மாணவர்கள் மற்றும் அவர்களது கல்வியின் பாதுகாப்புமே எனது தற்போதைய கவலையாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
❇️ போலீஸ், தீயணைப்பு வீரர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு...
கொரோனா பரவல் அதிகரிப்பால் போலீஸ், தீயணைப்பு பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக போலீஸ்துறையில் 2-ம் நிலை போலீஸ் பணியில் மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 (ஆண்கள்), 3,099 (பெண்கள்/திருநங்கைகள்), தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் 6545 (ஆண்கள் மட்டும்), சிறைத்துறையில் 117 (ஆண்கள்), 7 (பெண்கள்), தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 458 (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு முடிவு வெளியானது.
இந்தநிலையில் எழுத்து தேர்வில் பெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி தேர்வுகள் வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ‘ஹால்டிக்கெட்‘ தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ‘தொற்று இல்லை’ என்ற சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா 2-வது அலை வேகம் எடுத்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று அறிக்கை வாயிலாக வலியுறுத்தினர்.
அவர்கள் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் உடல் தகுதித்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அந்த செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக வருகிற 21-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி மற்றும் உடல்திறன் போட்டி தேர்வுகள் சில நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தேர்வு கடந்த மார்ச் 3-ந் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 12-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 21-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
😱 TN LOCK DOWN - தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல் - தலைமை செயலாளர் ஆலோசனை...
கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
சென்னை, ஏப்.17-
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளது.
நேற்று முன்தினம் 7,987 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை, நேற்று 8,449 ஆக உயர்ந்தது.
சென்னையில் நேற்று முன்தினம் 2,558 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று 2,636 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்றின் எண்ணிக்கை, தமிழக அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு சார்பில், திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்புப்பணிகள் பற்றியும், தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், பகல் 12.30 மணிக்கு முடிந்தது.
தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இரவு ஊரடங்கை அமல்படுத்தலாமா? வார விடுமுறை நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என்பது போன்ற அம்சங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கலாமா? என்றும், அதன் பிறகும் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்கும்பட்சத்தில் அரசு அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக குறைக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு வருகிறார். எனவே அவர் இதுகுறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று தெரிகிறது.
🤙 RASIPALAN - உங்கள் ராசி பலன் - 16.4.2021 முதல் 22.4.2021 வரை...
உங்கள் ராசி பலன் கணித்தவர்: `ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா
16.4.2021 முதல் 22.4.2021 வரை
மேஷம்
தளர்வடைந்த காரியங்களில், தக்க நபர் களின் உதவியோடு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு அதிகமாகும். தொழில் செய்பவர்கள், இரவு - பகல் பாராமல் பணிகளை முடிக்க பாடுபடுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் தலைகாட்டும். அவற்றை பெண்கள், சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
ரிஷபம்
எதிர்பார்த்த வரவுகள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைப்பளுவால் அவதிப்படுவர். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப மீண்டும் அதே பணியைச் செய்ய வேண்டியதிருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். பெண்களால் உதிரி வருமானம் உண்டு. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம்.
மிதுனம்
எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சியின் பேரில் பணவரவு வரலாம். தொழில் செய்பவர்கள், கைகளில் உள்ள பணிகளை, உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். குடும்பத்தில் புதிய பொருட்கள் சேரும். பணிபுரியும் பெண் களால் குடும்ப நிதியில் பற்றாக்குறை அகலும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.
கடகம்
அதிக செலவுகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர் களுக்கு, வாடிக்கையாளர்களின் வரவால் வேலைப்பளு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெண்கள் கவனமாக பணியாற்றுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்
சில காரியங்களை நண்பர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் பணியை துரிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.
கன்னி
காரிய வெற்றிக்கு அதிக முயற்சி தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் செல்வாக்கோடு கூடிய புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தொழில் செய்பவர்கள், புதிய பணிகளில் ஓய்வில்லாமல் ஈடுபட வேண்டியதிருக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை, குடும்ப உறுப்பினர்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.
துலாம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. உயரதிகாரி களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் மூலம், அவசர வேலைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தொழில் செய்பவர்களுக்கு, புதிய பணிகள் கிடைத்து, எதிர்பார்த்த லாபம் வந்துசேரும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
தனுசு
நண்பர்களின் ஒத்துழைப்போடு உங்கள் காரியங்களில் வெற்றியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக செயல்படுங்கள். தொழிலில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால், உடல்நலத்தில் சிறு தொல்லை ஏற்படலாம். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு அகலும். செலவுகள் கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.
மகரம்
முயற்சி செய்யும் பல காரியங்களில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்துசேரலாம். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணிபுரிவீர்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிடுங்கள்.
கும்பம்
பல செயல்களில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, செல்வாக்குள்ள புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, பணிச் சுமைக்கு ஏற்ப, பணவரவுகளும் இருக்கும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.
மீனம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள், விடுமுறையில் உள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய நேரிடும். தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளை அதிக முயற்சியுடன் செய்து கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாகலாம். இந்த வாரம் புதன்கிழமை, லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
😎 SUB INSPECTOR RESULT - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு...
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பொது பிரிவினர் ஒதுக்கீட்டில் 688 இடங்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 281 இடங்கள் என மொத்தம் 969 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்தது.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 969 பணியிடங்களில் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கும், இந்திய மாநில அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு பொது பிரிவினருக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதியும், துறை சார்ந்தவர்களுக்கு 13-ந்தேதியும் நடந்தது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக உடற்தகுதி தேர்வு கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 30-ந்தேதி நடத்தப்பட்டது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும், கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி வரையிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அந்தவகையில் இந்த 3 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 76 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு, கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி, குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர் போன்ற பதவிகளுக்கும் அளிக்கப்பட்ட பயிற்சியை பெற்றவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 505 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று மத்திய-மாநில அரசு பணிகளில் உள்ளனர்.
அந்தவகையில், இந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து மனிதநேய அறக்கட்டளையால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தால் மிகச்சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கவுரவ பயிற்சி இயக்குனர் மா.கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
அவ்வாறு அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டவர்களில், பொது ஒதுக்கீட்டில் 48 மாணவர்களும், ஒரு மாணவியும், போலீஸ் துறையில் பணிபுரிந்து வருபவர்களில் 23 மாணவர்களும், 4 மாணவிகளும் என ஆக மொத்தம் 76 பேர் இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 71 மாணவர்களும், 5 மாணவிகளும் அடங்குவார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
✍️ ARREAR EXAM - மே மாதம், ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வு ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்...
தமிழகத்தில் மே மாதம் ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதில், என்ஜினீயரிங், கலை அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள், அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடைவதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்? என்பது குறித்து, முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ததில், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் வருகிற மே மாதம் இறுதிக்குள் ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்துவதில் பல சிரமங்கள் உள்ளது. அரியர் தேர்வை குறைவான மாணவர்களே எழுதுவதால், நேரடி முறையில் தேர்வை நடத்த வேண்டும்' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆன்-லைன் அல்லது ஆப்-லைன் மூலமாக மாணவர்கள் அரியர் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைக்கழக மானிய குழுவிடம் ஆலோசனை பெற்று தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
✍️ PG NEET 2021 முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஒத்திவைப்பு...
நாடு முழுவதும் 18-ந்தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்து உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தையும் கடந்து மிகுந்த அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் கூடும் நிகழ்வுகளை ரத்து செய்து வருகிறது.
இதில் குறிப்பாக மாணவர்களின் நலன்களை கருதி பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.
இதைப்போல மாநிலங்களும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வரிசையில் வருகிற 18-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இதை ஏற்றும் கொரோனாவால் நாடு முழுவதும் எழுந்துள்ள அபாயத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வை மத்திய அரசு தள்ளி வைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 18-ந்தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.
இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.